Yengirindhu Vandhayo Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
பெண்: அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
பெண்: எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
பெண்: அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
—பின்னணி இசை—
பெண்: வாசத்தண்ணி தெளிக்கையில
வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே
என்ன நீயும் புளியிறியே
பெண்: ஆஞ்சி வச்ச கீர போல
நினைப்புல தான் கரையிரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா
அடி மனச நசுக்குறியே
பெண்: அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
பெண்: எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
—பின்னணி இசை—
பெண்: நடக்கையில தொடர்ந்து வர
நடு நடுவே மறஞ்சுடுர
தலைமுடிய ஒதுக்கையில
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுர
பெண்: கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன
கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன
ஒதர ஒரு வழி இல்லையே
பெண்: அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
—பின்னணி இசை—
பெண்: ம்ம் ம்ம் உயிரோடு உறைந்தாயே






