Kanmoodi Thirakumbothu Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
ஆண்: குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து
இதுதான் காதல் என்றாலே
ஆண்: தெரு முனையை தாண்டும் வரையில்
வெறும் நாள்தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று
திருநாள் என்கின்றேன்
ஆண்: அழகான விபத்தில் இன்று
ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்
வேண்டாம் என்றேன்
—பின்னணி இசை—
ஆண்: உன் பேரும் தெரியாது
உன் ஊரும் தெரியாது
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
ஆண்: நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
ஆண்: உயிருக்குள் இன்னோர் உயிரை
சுமக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் எடையை
உணர்கின்றேன் காதல் இதுவா
ஆண்: கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
—பின்னணி இசை—
ஆண்: வீதி உலா நீ வந்தால்
தெருவிளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே
ஆண்: நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கதான் மழை குதிக்குமே
ஆண்: பூகம்பம் வந்தால் கூட ஓஹோ
பதறாத நெஞ்சம் எனது ஓஹோ
பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
பட் என்று சரிந்தது இன்று ஓஓ
ஆண்: கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
ஆண்: குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து
இது தான் காதல் என்றாலே



