என் மேல் விழுந்த

En Mel Vizhundha Lyrics in Tamil
Song Name: En Mel Vizhundha
Singers: K. S. Chithra and P. Jayachandran
Year: 1994

En Mel Vizhundha Lyrics in Tamil

ஆண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

ஆண்: என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: உடம்பில் உறைகின்ற
ஓர் உயிர் போல்
உனக்குள்தானே நான் இருந்தேன்

ஆண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: மண்ணைத் திறந்தால்
நீர் இருக்கும்
என் மனதைத் திறந்தால்
நீ இருப்பாய்

ஆண்: ஒளியைத் திறந்தால்
இசை இருக்கும்
என் உயிரைத் திறந்தால்
நீ இருப்பாய்

பெண்: வானம் திறந்தால்
மழை இருக்கும்
என் வயதைத் திறந்தால்
நீ இருப்பாய்

ஆண்: இரவைத் திறந்தால்
பகல் இருக்கும்
என் இமையைத் திறந்தால்
நீ இருப்பாய்

பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
ஆண்: அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

பெண்: மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
ஆண்: பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ

பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

ஆண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

ஆண்: உடம்பில் உறைகின்ற
ஓர் உயிர் போல்
உனக்குள்தானே நான் இருந்தேன்

பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team