உன் பேரை சொல்லும் போதே

Un Perai Sollum Pothe Lyrics in Tamil
Movie: Angadi Theru(அங்காடித் தெரு)
Music: G. V. Prakash Kumar
Singers: Haricharan, Naresh Iyer and Shreya Ghoshal
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Un Perai Sollum Pothe Lyrics in Tamil

ஆண்: உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்

ஆண்: நீ பார்க்கும் போதே மழை ஆவேன்
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

பெண்: உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்

பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

ஆண்: நீ பேரழகில் போர் நடத்தி
என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே
கடத்திச் சென்றாய்

பெண்: நான் பெண்ணாக பிறந்ததற்கு
அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள்
நீயே தந்தாய்

ஆண்: என் உலகம் தனிமைக் காடு
நீ வந்தாய் பூக்களோடு
என்னைத் தொடரும் கனவுகளோடு
பெண்ணே பெண்ணே

பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

ஆண்: உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்

பெண்: நீ பார்க்கும் போதே
மழை ஆவேன்

ஆண்: உன் அன்பில்
கண்ணீர்த் துளி ஆவேன்

ஆண்: உன் கருங்கூந்தல் குழலாகதான்
எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான்
ஜென்மம் தீரும்

பெண்: உன் மார்போடு சாயும்
அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த
வலிகள் தீரும்

ஆண்: உன் காதல் ஒன்றைத் தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டி ஒன்றுமே இல்லை
பெண்ணே பெண்ணே

ஆண்: நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

ஆண் மற்றும் பெண்: உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்

ஆண் மற்றும் பெண்: நீ பார்க்கும் போதே மழை ஆவேன்
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன்
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

Other Songs From Angadi Theru