நெனச்சபடி

Nenaichchapadi Lyrics in Tamil
Movie: Kadhalar Dhinam(காதலர் தினம்)
Music: A. R. Rahman
Singers: M. G. Sreekumar, Srinivas, Ganga Sitharasu and Kanchana
Lyricist: Vaali(வாலி)

Nenaichchapadi Lyrics in Tamil

பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி

பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ

ஆண் மற்றும் பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாலோ

ஆண்: என் தோள்களே தோட்டம் என்று
என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே

ஆண்: கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வானம் நந்தவனம் ஆகும்

பெண்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு

பெண்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு

ஆண்: உன் கணவன் நாளைதான் வர வேண்டும்
உயிர்க் காதல் நெஞ்சையே தர வேண்டும்

ஆண்: மணப்பந்தல் தோரணம் நான் போட
மணவாளனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட

ஆண்: காதலெனும் சொல்லை
நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல்
எந்தன் கையிலில்லை

ஆண்: காதலெனும் சொல்லை
நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல்
எந்தன் கையிலில்லை

ஆண்: வாழ்வு தந்த வள்ளல்
வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும்
வந்தேன் கண்கள் ஈரமாக

ஆண்: என்றும் எனது கண்ணிலே
உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே
என் இன்பம்

ஆண்: என்றும் எனது கண்ணிலே
உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என்
இன்பம்

ஆண்: இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே
எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க நலமாக நீ வாழ்க நலமாக

பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ

ஆண் மற்றும் பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ

ஆண்: அல்லி விழியோரம்
அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது
தாழை மலர் சூட்டி

ஆண்: அல்லி விழியோரம்
அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது
தாழை மலர் சூட்டி

ஆண்: ஆதி முதல் அந்தம்
ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால்
மின்னல் முகம் காட்டி

ஆண்: கெட்டி மேளம் கொட்டிட
மணப்பெண்ணை
தொட்டுத் தாலி கட்டினான்
மாப்பிள்ளை

பெண்: கெட்டி மேளம் கொட்டிட
மணப்பெண்ணை
தொட்டுத் தாலி கட்டினான்
மாப்பிள்ளை

ஆண்: இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ
என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க நலமாக

பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ

ஆண் மற்றும் பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ

பெண்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ சூட்டு

பெண்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ சூட்டு