Nenaichchapadi Lyrics in Tamil
பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
ஆண் மற்றும் பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கெனப் பிறந்தாளோ
உயிருடன் கலந்தாலோ
ஆண்: என் தோள்களே தோட்டம் என்று
என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
ஆண்: கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வானம் நந்தவனம் ஆகும்
பெண்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
பெண்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
ஆண்: உன் கணவன் நாளைதான் வர வேண்டும்
உயிர்க் காதல் நெஞ்சையே தர வேண்டும்
ஆண்: மணப்பந்தல் தோரணம் நான் போட
மணவாளனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட
ஆண்: காதலெனும் சொல்லை
நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல்
எந்தன் கையிலில்லை
ஆண்: காதலெனும் சொல்லை
நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல்
எந்தன் கையிலில்லை
ஆண்: வாழ்வு தந்த வள்ளல்
வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும்
வந்தேன் கண்கள் ஈரமாக
ஆண்: என்றும் எனது கண்ணிலே
உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே
என் இன்பம்
ஆண்: என்றும் எனது கண்ணிலே
உன் பிம்பம்
உன்னை எண்ணி வாழ்வதே என்
இன்பம்
ஆண்: இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே
எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க நலமாக நீ வாழ்க நலமாக
பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
ஆண் மற்றும் பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
ஆண்: அல்லி விழியோரம்
அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது
தாழை மலர் சூட்டி
ஆண்: அல்லி விழியோரம்
அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது
தாழை மலர் சூட்டி
ஆண்: ஆதி முதல் அந்தம்
ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தால்
மின்னல் முகம் காட்டி
ஆண்: கெட்டி மேளம் கொட்டிட
மணப்பெண்ணை
தொட்டுத் தாலி கட்டினான்
மாப்பிள்ளை
பெண்: கெட்டி மேளம் கொட்டிட
மணப்பெண்ணை
தொட்டுத் தாலி கட்டினான்
மாப்பிள்ளை
ஆண்: இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ
என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க நலமாக
பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
ஆண் மற்றும் பெண்: நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கெனப் பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
பெண்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ சூட்டு
பெண்: மருதாணிக் கோலம் போட்டு
மணிக்கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ சூட்டு