கண்ணாமூச்சி ஏனடா

Kannamoochi Yenada Lyrics in Tamil
Movie: Kandukondain Kandukondain(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
Music: A. R. Rahman
Singer: KS Chithra
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Kannamoochi Yenada Lyrics in Tamil

பெண்: கண்ணாமூச்சி ஏனடா

பெண்: கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா

பெண்: கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

பெண்: அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்

பெண்: வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை
வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை

பெண்: இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்

பெண்: கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

பெண்: என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா

பெண்: என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது

பெண்: உன் இதழ் கொண்டு வாய் மூட
வா என் கண்ணா

பெண்: உன் இதழ் கொண்டு வாய் மூட
வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா

பெண்: பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

பெண்: என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா

பெண்: கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா

பெண்: வான்மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்

பெண்: வான்மழை விழும்போது
மலைகொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது
எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்

பெண்: நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நான் இல்லையா

பெண்: தினம் ஊசலாடுதென் மனசு
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே

பெண்: என்னுயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே
உயிர்தர வா

பெண்: கண்ணாமூச்சி ஏனடா
என் கண்ணா
நான் கண்ணாடிப்
பொருள் போலடா