கதைகளை பேசும்

Kadhaigalai Pesum Lyrics in Tamil
Movie: Angadi Theru(அங்காடித் தெரு)
Music: G. V. Prakash Kumar
Singers: Benny Dayal and Hamsika Iyer
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Kadhaigalai Pesum Lyrics in Tamil

ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

ஆண்: ஓ என்னை கேளாமல்
எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே

பெண்: ஓ இருளும் இல்லாமல்
ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே

ஆண்: கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

பெண்: கோயிலின் உள்ளே
நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா

ஆண்: உன்னுடன் வாழும்
ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா

பெண்: கல்லும் மண்ணும் ஓ
வீடுகளில்லை
ஆண்: ஓ அன்பின் வீடே ஓ
அழிவது இல்லை

பெண்: வெறும் கரையில்
படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா

ஆண்: உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும்
தேவை இல்லையடி

ஆண்: ஓ கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

பெண்: உனக்குள் தொடங்கி
உனக்குள்தானே
எந்தன் உலகம் முடிகிறதே

ஆண்: உன் முகம் பார்த்து
ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே

பெண்: ஓ இரவின் மடியில் ஓ
குழந்தைகள் ஆவோம்
ஆண்: ஓ இருட்டின் நதியில் ஓ
இறங்கி போவோம்

பெண்: நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
ஆண்: இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

ஆண்: ஓ கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

ஆண்: ஓ என்னை கேளாமல்
எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே

பெண்: ஓ இருளும் இல்லாமல்
ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே