மறுவார்த்தை

Maruvaarthai Lyrics in Tamil
Movie: Enai Noki Paayum Thota(என்னை நோக்கி பாயும் தோட்டா)
Music: Darbuka Siva
Singer: Sid Sriram
Lyricist: Thamarai(தாமரை)

Maruvaarthai Lyrics in Tamil

ஆண்: மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

ஆண்: மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

ஆண்: விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

ஆண்: மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே

ஆண்: விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

ஆண்: மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்

ஆண்: மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ

ஆண்: தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

ஆண்: இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்

ஆண்: பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

ஆண்: மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

ஆண்: மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்

ஆண்: விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

ஆண்: மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே

ஆண்: மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு