மருதாணி மருதாணி

Marudhani Marudhani Song Lyrics in Tamil
Movie: Sakkarakatti(சக்கரகட்டி)
Music: AR Rahman
Singers: Madhushree and AR Rahman
Lyricist: Vaali(வாலி)

Marudhani Marudhani Song Lyrics in Tamil

பெண்: மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி

பெண்: கங்கை என்று
கானலை காட்டும்
காதல் கானல் என்று
கங்கையை காட்டும்

பெண்: வாழும் பயிருக்கு
தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கு
கண்ணீர் வேண்டும்

பெண்: மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது

பெண்: நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது

பெண்: மருதாணி
மருதாணி விழியில் ஏன்

பெண்: அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடு நீரும் சுடு சோறும்

பெண்: காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்

பெண்: ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி

பெண்: மருதாணி விழியில் ஏன்

பெண்: மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது

பெண்: நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது

பெண்: அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்பால் போலே
எந்நாளும் பரிசுத்தம்

பெண்: ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய்
அவள் பார்க்கிறாள்

பெண்: ஆக மொத்தம்
அவசரக் கோலம்
அவளுக்கிதை காட்டிடும் காலம்

பெண்: மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி

பெண்: கங்கை என்று
கானலை காட்டும்
காதல் கானல் என்று
கங்கையை காட்டும்

பெண்: வாழும் பயிருக்கு
தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும்
கண்ணீர் வேண்டும்

பெண்: மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது

பெண்: நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது

பெண்: மருதாணி மருதாணி விழியில் ஏன்
மருதாணி மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்

Other Songs From Sakkarakatti