
Marudhani Marudhani Song Lyrics in Tamil
பெண்: மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
பெண்: கங்கை என்று
கானலை காட்டும்
காதல் கானல் என்று
கங்கையை காட்டும்
பெண்: வாழும் பயிருக்கு
தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கு
கண்ணீர் வேண்டும்
பெண்: மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
பெண்: நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
பெண்: மருதாணி
மருதாணி விழியில் ஏன்
பெண்: அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடு நீரும் சுடு சோறும்
பெண்: காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
பெண்: ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி
பெண்: மருதாணி விழியில் ஏன்
பெண்: மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
பெண்: நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
பெண்: அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்பால் போலே
எந்நாளும் பரிசுத்தம்
பெண்: ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய்
அவள் பார்க்கிறாள்
பெண்: ஆக மொத்தம்
அவசரக் கோலம்
அவளுக்கிதை காட்டிடும் காலம்
பெண்: மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
பெண்: கங்கை என்று
கானலை காட்டும்
காதல் கானல் என்று
கங்கையை காட்டும்
பெண்: வாழும் பயிருக்கு
தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும்
கண்ணீர் வேண்டும்
பெண்: மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
பெண்: நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது
பெண்: மருதாணி மருதாணி விழியில் ஏன்
மருதாணி மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்