நியூயார்க் நகரம் பாடல் வரிகள்

New York Nagaram Lyrics in Tamil
Music: AR Rahman
Singer: AR Rahman

New York Nagaram Lyrics in Tamil – Vaali

ஆண்: நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

ஆண்: நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

ஆண்: நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

ஆண்: நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

ஆண்: பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை

ஆண்: விழியில் விழும் தூசி தன்னை
நாவால் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க
நீ இங்கே இல்லை

ஆண்: நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள்
வருஷம் ஆனதேனோ

ஆண்: வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும்
விளக்கமானதேனோ

பெண்: நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது

ஆண்: நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா

ஆண்: சில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம்
கோடை ஆனதேனோ

ஆண்: வா அன்பே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிகட்டி
போல மாறுமே

பெண்: நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது

ஆண்: நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

Other Songs From Sillunu Oru Kaadhal