நீ பாதி நான் பாதி

Nee Pathi Naan Pathi Lyrics in Tamil
Movie: Keladi Kannmanii(கேளடி கண்மணி)
Music: Ilaiyaraaja
Singers: K. J. Yesudas and Uma Ramanan
Lyricist: Vaali(வாலி)

Nee Pathi Naan Pathi Lyrics in Tamil

ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணே
பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணே
பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண்: நீயில்லையே இனி நானில்லையே
உயிர் நீயே

பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

பெண்: வானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
ஆண்: கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப்பாடல்

பெண்: மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு
அர்த்தமிருக்கும் உன்னாலே

ஆண்: மெல்ல சிரிக்கும்
உன் முத்துநகை ரத்தினத்தை
அள்ளித்தெளிக்கும் முன்னாலே

பெண்: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணே
பெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண்: இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
பெண்: இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

ஆண்: சொர்கம் எதற்கு
என் பொன்னுலகம் பெண்ணுருவில்
பக்கம் இருக்கு கண்ணே வா

பெண்: இந்த மனம்தான்
என் மன்னவனும் வந்து உலவும்
நந்தவனம் தான் அன்பே வா

ஆண்: சுமையானது ஒரு சுகமானது
சுவை நீதான்

பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

பெண்: நீ பாதி நான் பாதி கண்ணா
ஆண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

Other Songs From Keladi Kannmanii