
Yaar Yenna Sonnalum Lyrics in Tamil
ஆண்: பூமியில ஓ ஓ
தேவதைகள் தேவதைகள்
உங்கள் புன்னகையால்
மனம் வீசிடுங்கள் வீசிடுங்கள்
ஆண்: வானத்திலே
லட்சம் மின்மினிகள்
ஒரு மழை என்றே
வந்து பொழியுங்கள்
ஆண்: மழை சிந்தும் தேன் துளியில்
அட இல்லாத சுவைதான்
உன் பாசத்தில் கண்டேன்
என் வாழ்க்கைக்கொரு விடைதான்
ஆண்: உண்மைகள் எங்கே
உண்மைகள் எங்கே
பொய்களுக்குள்ளே
பொய்களுக்குள்ளே
நன்மைகள் எங்கே
தீமைகளுக்குள்ளே
தீமைகளுக்குள்ளே ஓ ஓ
ஆண்: யார் என்ன சொன்னாலும்
யார் என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
ஆண்: நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்
ஆண்: இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீதானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீதான் பூமி
ஆண்: சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி
வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை
பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி
வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை
ஆண்: பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும்
நினைவுகள் நம்மை சேர்த்திடுமே
அழகாய் பூ பூத்திடவேண்டியே
வேர்கள் நீர் ஈர்த்திடுமே
ஆண்: இன்னும் ஓர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம் தேவை
ஆண்: யார் என்ன சொன்னாலும்
யார் என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
ஆண்: நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்
ஆண்: துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும்
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்
தெய்வங்களாய் நீங்கள் வாழ்கின்ற வீட்டினில்
தேவர்களாய் நாங்கள் காத்திருப்போம்
ஆண்: மண்ணில் சிறு பறவை வாழ
மரம்தான் இடம் கொடுத்திடும்
மரம்தான் இடம் கொடுத்த போதும்
மண்தான் உயிர் அழித்திடும்
ஆண்: இன்னோர் ஒரு உலகில்
நான் வளர்ந்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நான் வரம் கேட்பேன்
ஆண்: யார் என்ன சொன்னாலும்
யார் என்ன செஞ்சாலும்
சொந்தமும் பந்தமும் கூட வரும்
ஆண்: நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரு சொல்லும்
ஆண்: இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீதானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீதான் பூமி