ஒரு நாளும்

Oru Naalum Lyrics in Tamil
Movie: Ejamaan(எஜமான்)
Music: Ilaiyaraaja
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist: R. V. Udayakumar(ஆர்.வி. உதயகுமார்)

Oru Naalum Lyrics in Tamil

குழு: கங்கண கணவென
கிண்கிணி மணிகளும்
ஒலிக்க ஒலிக்க

குழு: எங்கெங்கிலும் மங்களம் மங்களம்
எனும் மொழி
முழங்க முழங்க

குழு: ஒரு சுயம்வரம் நடக்கின்றதே
இது சுகம் தரும் சுயம்வரமே

பெண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

பெண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

பெண்: விழியோடு இமைப் போலே
விலகாத நிலை வேண்டும்

பெண்: எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே

ஆண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

பெண்: சுட்டுவிரல் நீ காட்டு
சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று
கையெழுத்துப் போடுவேன்

ஆண்: உன் உதிரம் போலே நான்
பொன்னுடலில் ஓடுவேன்
உன் உடலில் நான் ஓடி
உள் அழகைத் தேடுவேன்

பெண்: தோகை கொண்டு நின்றாடும்
தேன்கரும்பு தேகம்
ஆண்: முந்தி வரும் தேன் வாங்கி
பந்தி வைக்கும் நேரம்

பெண்: அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

ஆண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

ஆண்: விழியோடு இமை போலே
விலகாத நிலை வேண்டும்

ஆண்: இணையான இளமானே
துணையான இளமானே
இணையான இளமானே
துணையான இளமானே

பெண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

ஆண்: கட்டில் இடும் சூட்டோடு
தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்த
பிள்ளைக் கனி வேண்டுமே

பெண்: உன்னை ஒரு சேய் போலே
என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில்
கண்மயங்கித் தூங்க வா

ஆண்: ஆரீராரோ நீ பாட
ஆசை உண்டு மானே
பெண்: ஆறு ஏழு கேட்டாலும்
பெற்றெடுப்பேன் நானே

ஆண்: முத்தினம் வரும்
முத்து தினம் என்று
சித்திரம் வரும்
விசித்திரம் என்று

பெண்: ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்

ஆண்: உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

பெண்: விழியோடு இமை போலே
விலகாத நிலை வேண்டும்

ஆண்: இணையான இளமானே
துணையான இளமானே

பெண்: ஓ எனை ஆளும் எஜமானே
எனை ஆளும் எஜமானே