Movie: Nannbenda(நண்பேன்டா)
Music: Harris Jayaraj
Singers: Vijay Prakash and Megha
Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி)

Enai Marubadi Marubadi Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: எனை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ம்ம்ம்

—பின்னணி இசை—

ஆண்: அவள் என்னைப் பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்

ஆண்: அவள் பின்னே சென்றேன் தினம்
நான் சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்

ஆண்: மீண்டும் மீண்டும் அவளின் பின்னே
காதல் கேட்டு அலைந்தேன் நானே
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

ஆண்: எனை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்

ஆண்: எனை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்

—பின்னணி இசை—

ஆண்: சொற்கள் கொண்டு காதல் சொன்னால்
காதை மூடிக் கொள்வாள் என்றே
மௌனம் கொண்டு சொன்னேனே ஓஹோ

ஆண்: பூக்கள் தந்து காதல் சொன்னால்
தூக்கி வீசிப் போவாள் என்றே
குப்பை கூடை தந்தேனே

ஆண்: அவள் காலையிலே சென்ற சாலையிலே
நான் மாலை தேயும் போதும் ஏன் நின்றேன்
அவள் போலிருக்கும் சில மகளிரிடம்
நான் ஆசையோடு பேசியே ஏன் நின்றேன்

ஆண்: அவள் என்னை பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்

ஆண்: அவள் பின்னே சென்றேன் தினம்
நான் சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்

—பின்னணி இசை—

ஆண்: எப்போதும் போல் தென்றல் இல்லை
எப்போதும் போல் சுவாசம் இல்லை
இன்றோ நேற்றைப் போல் இல்லை

ஆண்: ஓ எப்போதும் போல் பாடல் இல்லை
இப்போது அதில் அர்த்தம் கொள்ளை
யாரும் விளக்கவில்லை

ஆண்: அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிர
என் பூமி எங்கும் வண்ணம் ஏன் இல்லை
அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிர
என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை

ஆண்: அவள் என்னை பார்த்த கணம்
என் காற்றில் எங்கும் மனம்
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்

ஆண்: அவள் பின்னே சென்றேன் தினம்
நான் சொன்னேன் எந்தன் மனம்
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்

ஆண்: மீண்டும் மீண்டும் அவளின் பின்னே
காதல் கேட்டு அலைந்தேன் நானே
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்
பார்வை ஒன்றில் சொன்னாளே

ஆண்: எனை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்

ஆண்: எனை மறுபடி மறுபடி மறுபடி
திரும்பியே பார்த்தாள்
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்
இருதயம் ஈர்த்தாள்

—பின்னணி இசை—

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT