அழகூரில் பூத்தவளே

Azhagooril Poothavale Lyrics in Tamil
Movie: Thirumalai(திருமலை)
Music: Vidyasagar
Singers: S. P. Balasubrahmanyam and Sujatha Mohan
Lyricist: Arivumathi(அறிவுமதி)

Azhagooril Poothavale Lyrics in Tamil

ஆண்: அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே

ஆண்: உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

ஆண்: அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

பெண்: நீ உடுத்தி போட்ட உடை
என் வயதை மேயுமடா
ஆண்: நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமாய் ஆகுமடி

பெண்: இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே
கூச்சப்பட்டு போகிறதே

ஆண்: சடையாலே நீ இழுக்க
இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல்
வந்து வேகிறதே

பெண்: என்னை திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்

ஆண்: ஹோய் ஹோய்
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

ஆண்: நீ முறிக்கும் சோம்பலிலே
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
பெண்: நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்

ஆண்: குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ்
சங்கத்தமிழ் ஆனதடி

பெண்: அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை
ஆயுள் வரை தூருமடா

ஆண்: என்னை மறந்தாலும்
உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன்

பெண்: அன்பூரில் பூத்தவனே
ஆண்: என்னை அடியோடு சாய்த்தவளே
பெண்: மழையூரின் சாரலிலே
ஆண்: என்னை மார்போடு சேர்த்தவளே

பெண்: உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
ஆண்: உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்